(எம்.எப்.எம்.பஸீர்)
துறைமுக நகரின் களஞ்சியம் ஒன்றினை உடைத்து, அதிலிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொய்யான முறைப்பாட்டினை அளித்ததாக கூறப்படும் துறைமுக நகரின் கொள்முதல் அதிகாரியான சீன பிரஜை லி சி ஹூ என்பவரை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா நேற்று (17) உத்தரவிட்டார்.
உண்மையான தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களை முன் வைத்து , பொய் முறைப்பாட்டை வழங்கியதாக, துறைமுக பொலிசார் நேற்று குறித்த சீன நாட்டவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன் வைத்தனர்.
இதனையடுத்தே, சைனா ஹாபர் நிறுவனம், கிழக்கு கோபுரம், உலக வர்த்தக மையம் , கொழும்பு 1 எனும் முகவரியைக் கொண்ட துறைமுக நகரத்தின் கொள்முதல் அதிகாரியான லி சு ஹூ என்பவரை இவ்வாறு நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
துறைமுக நகரின் களஞ்சியம் ஒன்றினை உடைத்து அதனுள் இருந்த செப்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக குறித்த கொள்முதல் அதிகாரி துறைமுக பொலிஸாருக்கு அண்மையில் முறைப்பாடுச் செய்துள்ளார்.
இது தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
கைவிரல் ரேகை பதிவுகள், மோப்ப நாய்களை பயன்படுத்தி பொலிஸார் முதல்கட்டமாக விசாரணைகளை முன்னெடுத்ததாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மேலதிக விசாரணைகளில், அங்கிருந்து எந்த பொருட்களும் களவாடப்படவில்லை என இதன்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இது குறித்து தொடர்ந்து விசாரித்த போது, பல மாதங்களாக கொள்முதல் சமனிலை நடவடிக்கைகளின் போது குறைப்பாடாக இருந்த பொருட்களை திருடப்பட்டுள்ளதாக கூறி முறைப்பாடளித்து அதனூடாக கணக்காவணங்களை சமனிலை செய்ய குறித்த அதிகாரி முயன்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
அதற்காகவே அவர் பொய்யான முறைப்பாட்டை அளித்துள்ளதாக அவர்கள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்தே நீதிவான், குறித்த சீன கொள்முதல் அதிகாரிக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவிட்டார்.
நேற்றைய தினம் துறைமுக பொலிஸார் சார்பில், உப பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ராஜபக்ஷ நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM