(வத்துகாமம் நிருபர்)
கண்டியிலுள்ள பிரபல பாடசாலை மாணவர் ஒருவரை இளைஞர் குழுவொன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டம் மற்றும் சமாதானம், தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பணிப்புரை வழங்கியுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி குறித்த பாடசாலையின் முன் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
அதனைத் தழுவி வெளியிடப்பட்ட புகைப்படங்கள் இன்று சில பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தபோதிலும், சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை.
மேலும், குறித்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணமும் இது வரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், இது குறித்த விசாரணைகளை விரைவில் மேற்கொண்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை சட்டத்தின் முன் நிறுத்துமாறு, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM