வறக்காப்பொல – தும்மலியத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இச் சம்பவத்தில் காயமடைந்த 50 வயதான நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருவதால் மண் சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சாந்தியங்கள் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், நிலவும் கடும் மழை காரணமாக அங்குருவெல்ல வறக்காப்பொல வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் உள்ள தும்பலியத்த பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் வீடொன்றில் சிக்குண்ட 3 பேரை மீட்கும் பணியில் இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய 8 ஆவது சிங்க படையணியின் படையினர் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் குடும்பத்தினரின் ஒருவரை (தந்தை) மீட்டு வறக்காப்பொல வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதுடன் ஏனையவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM