அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவிகளை கொலை செய்வதற்குத் திட்டமிட்டதாக ஓர் இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
22 வயதான ட்ரெஸ் ஜென்கோ எனும் இந்த இளைஞன், ஒஹையோ மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் 3,000 மாணவிகளை கொல்வதற்கு திட்டமிட்டிருந்ததை கடந்த செவ்வாய்க்கிழமை (11) ஒப்புக்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி பல்கலைக்கழகத்தின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை.
பெண்களை பாலியல் ரீதியாக ஈர்க்க தம்மால் முடியாதெனக் கருதும், பெண்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட இணையவழி குழு ஒன்றின் அங்கத்தவர் (Incel--) என தன்னை ட்ரெஸ் ஜென்கோ கூறிக்கொள்கிறார்.
இவர் பெண்கள் பல்கலைக்கழகம் ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் 3,000 பேரை கொல்வதற்கு திட்டமிட்டதாகவும் இதற்காக குறிப்பொன்றை எழுதியதுடன், பெண்கள் பல்கலைக்கழகம் தொடர்பாக இணையத்தில் தேடுதல் நடத்தியதாகவும் வழக்குத் தொடுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறுப்பு, பொறாமை, பழிவாங்கல் நோக்கங்களுக்காக பெண்களை தான் கொலைசெய்யவுள்ளதாக மேற்படி குறிப்பில் ஜென்கோ தெரிவித்திருந்தார். மேற்படி குறிப்பு அதிகாரிகளால் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இக் கொலைத்திட்டத்துக்காக, இவர் 2019 ஆம் ஆண்டு குண்டுதுளைக்காத அங்கி, கையுறைகள், முகமூடி, கத்தி, மெகஸின்கள் முதலானவற்றை வாங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் 2019ஆம் ஆண்டு ஆரம்ப இராணுவப் பயிற்சியில் பங்குபற்றி, பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
2020 ஜனவரியில் இவர் மேற்படி பல்கலைக்கழகத்தில் கண்காணிப்புகளையும் நடத்தினார், இக்கொலைத் திட்டத்துக்காக இணையத்திலும் தேடுதல் நடத்தினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒஹையோ மாநிலத்திலுள்ள ஜென்கோவின் வீட்டில் 2020 மார்ச் 12 ஆம் திகதி பொலிஸார் தேடுதல் நடத்தினர். அதன்போது ஜென்கோவின் படுக்கை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துப்பாக்கியைத் தயாரித்த நிறுவனத்தின் அடையாளம், இலக்கம் எதுவும் அதில் இருக்கவில்லை.
அவரின் காரிலிருந்து துப்பாக்கி, பல மகஸின்கள், தோட்டாக்கள் அடங்கிய பெட்டிகள் ஆகியன கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM