(செய்திப்பிரிவு)
நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள முடியும் எனவும், இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள முடியும் எனவும் ஜி.புளொக் தலைவர் ரணில் வில்லத்தரகே தெரிவித்துள்ளார்.
படுவஸ்நுவர பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 'ஜி.புளொக் லைப்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த பருவத்திற்கான நெற்செய்கையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,
நாட்டில் டொலர் நெருக்கடி உள்ளது. அதை சமாளிப்பதற்கு அதிக ஆடை தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் வழங்க வேண்டும். தற்போது, பொருளாதார சவால்களை சமாளிக்க தேவையான டொலர்களை சம்பாதிப்பதில் ஆடைத் துறை பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது.
சிறந்த இலங்கை வர்த்தக நாமங்களை சர்வதேச சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதற்காக ஜி.புளொக் வெளிநாட்டு வர்த்தக நாமங்களுடன் போட்டியிட்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தேவையான டொலர்களை சம்பாதிப்பதில் ஈடுபட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறைக்க, உற்பத்திப் பொருளாதாரத்தை நாம் பின்பற்ற வேண்டும். நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரித்து, அந்தப் பொருட்களை சர்வதேச சந்தையில் போட்டியிட வைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்குக் கொண்டு வர முடியும்.
குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். இப்போதெல்லாம், படைப்பாற்றல் மிக்க இளைஞர்கள் இணையம் மூலம் வணிகம் செய்ய அதிக விருப்பத்துடன் உள்ளனர். மேலும் அத்தகைய வணிகங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்க முடியும்.
இவ்வாறான நிலையில், குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்கும் வகையில் சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எமது பொறுப்பாகும். அதற்காக ஜி.புளொக் சமூக நலத் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.
சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், நல்ல சமூகப் பின்னணியை உருவாக்குவதோடு, நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பங்களிப்பதாக அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM