எவன்காட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சிமாக பயன்படுத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதா இல்லை உடைப்பதா என்பது தொடர்பில் காலி பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
குறித்த கப்பல் தொடர்பான வழக்கு கடந்த 9ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, 2 இலட்சம் டொலர்கள் பிணையுடன் கப்பலை விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி நிபந்தனையொன்றை முன்வைத்தார்.
எனினும் குறித்த கப்பல் ஒரு வருடமாக நங்கூரமிடப்பட்டுள்ளதால், அதனை பராமரிப்பதற்கு 77 மில்லியன் ரூபாய் செலவாகி இருப்பதாகவும், தொடர்ந்தும் குறித்த கப்பலை பராமரிக்க முடியாது என்றும் எவன்காட் நிறுவனத்தின் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார்.
மேலும் குறித்த கப்பலால் ஏற்படக்கூடிய கடற் சூழல்பாதிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM