(எம்.வை.எம்.சியாம்)
மிரிஹான பிரதேசத்தில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை தொகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மிரிஹான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
பொலிஸார் மற்றும் மாநகரசபை தீயணைக்கும் குழுவினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு காவலாளியாக தொழில் புரிந்த முதியவர் ஒருவரே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 63 வயதுடையவராவார். தீப் பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM