( எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்திருந்த வெலிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2023 மார்ச் 17 வரை இவ்வாறு அப்பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதி திலும் குமார ஆகியோருக்கு எதிரக சட்ட மா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று (10) விசாரணைக்கு வந்தது.
இதன்போது சம்பிக்க ரணவக்க சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, தனது சேவை பெறுநரின் வெளிநாட்டு பயணத் தடையை அடுத்த தவணை வரும் வரையில் நீக்குமாறு கோரினார்.
இதர்கு வழக்குத் தொடுநர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் எந்த எதிர்ப்பையும் முன் வைக்கவில்லை.
இதனையடுத்தே சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத் தடையை நீதிமன்றம் தற்காலிகமாக தலர்த்தியது. அதன்படியே வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 2023 மார்ச் 17 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில் சந்தீப் சம்பத் எனும் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில், சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான வழக்கே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வெலிக்கடை பொலிச் பிரிவில் டப்ளியூ.பி.கே.பி. 4575 எனும் ஜீப் வண்டியின் சாரதியாக செயற்பட்டு அபாயகரமாக வாகனம்ச் செலுத்தி ஒருவரை படுகாயத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அந்த விபத்து இடம்பெற்ற காலப்ப்குதியில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்ப்ட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதியாக செயற்பட்ட திலும் துஷித குமார ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த குற்றப் பத்திரிகி தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM