நைஜீரியாவின் அனம்ப்ரா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 85 பேருடன் சென்ற படகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் கவிழ்ந்ததில் 76 பேர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை ( 7) இடம்பெற்றுள்ளது.
படகு விபத்து குறித்து நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி கவலை தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அதன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மாநிலத்தின் ஓக்பாரு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து 85 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து பற்றிய செய்தி வெளியானதும், நைஜீரிய அரசு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த படகுகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை சரிபார்க்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
படகு விபத்து குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி புஹாரி, அனைத்து பயணிகளுக்கும் கணக்கு காட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
"உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும், இந்த துயரமான விபத்தில் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM