யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக் 7) யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கையிட்டனர்.
இந்நிலையில் சந்தேக நபர் சனிக்கிழமை (ஒக் 8) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பிணை வழங்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அப்பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM