(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
தேசிய சபையினால் நியமிக்கப்பட்ட குறுகிய,நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய சபையின் உப குழு நேற்று கூடிய போது இந்த நியமனம் வழங்கப்பட்டது.
உப குழுவின் தலைவர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவின் பெயரை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்மொழிந்ததுடன்,அதனை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வழிமொழிந்தார். கொள்கைத் தயாரிப்புத் தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அரச நிர்வாகக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,நவீனமயப்படுத்தல்,சுகாதாரம்,மற்றும் கல்விக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,மீன்பிடி,உணவுக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,மின்சக்தி மற்றும் வலுசக்தி கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை நவீனமயப்படுத்தல்,தொழில் முனைவுகள் தொடர்பான கொள்கைகளை நவீனமயப்படுத்தல் தொடர்பில் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள குறித்த துறைசார் நிபுணர்களை தேசிய சபையின் உபகுழுலுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்கு அமைய குறுகிய கால யோசனைகளை ஒருமாத காலத்துக்குள்ளும்,நடுத்தரகால யோசனைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும்,நீண்டகால யோசனைகளை மூன்று மாதங்களுக்குள்ளும் தேசிய சபைக்கு சமர்ப்பிக்க குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM