மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6 பேர் கைது

Published By: Digital Desk 3

07 Oct, 2022 | 10:12 AM
image

மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் 3 பேர் வியாழக்கிழமை (6) காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்பில் இது வரை ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த  சிலர் கமன் கெதர பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இருந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இதன்போது 51 வயதான தந்தை, 23 மற்றும் 24 வயதான அவரது இரண்டு மகன்களும் துப்பாக்கிச்சூட்டுக்கு  இலக்காகி உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை மையபப்டுத்தி, கலேவலயில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (6) சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் 3 பேர் சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37