பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது முற்றிலும் தவறானது - விமல் வீரவன்ச

Published By: Vishnu

06 Oct, 2022 | 09:38 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்,எம்.வசீம்)

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது முற்றிலும் தவறானது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரின் நிதியா பாராளுமன்றில் செலவு செய்யப்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (6) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் இன்று (06)அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டது,நாங்களும் விவாதத்துக்கு தயாராக வந்தோம்.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து அந்த உரை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பினர் தீர்மானித்தனர்.பாராளுமன்ற அமர்வுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 90 இலட்சம் ரூபா செலாவாகுகிறது.

22ஆவது திருத்தச் சட்டமூலம் வரைபு மீதான விவாதத்தை நடத்தாவிடின் பாராளுமன்றத்தை ஒத்திவையுங்கள் அதனை விடுத்து ஜனாதிபதியின் உரை மீதான பொய்யான விவாதத்தை நடத்துவது பயனற்றதாகும்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் பசி கொடுமையால் மயங்கி விழும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள போது பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீண்விரயமாக்குவது முற்றிலும் தவறானது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரின் நிதியா பாராளுமன்றில் செலவு செய்யப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51