(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் முன்னைய ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட ஆணைகுழுவின் அறிக்கை வெளியிட்டால் எதிர்கால விசாரணைக்கு தடையேற்படுவதுடன் சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனால் அதனை வெளியிட முடியாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீதி அமைச்சுக்கான செலவினை தொடர்பான விவாதத்தில் ஜே.வி.பி. எம்.பி விஜித்த ஹேரத் எம்.பி. எழுப்பிய கேளிவிக்கு பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டன. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே? ஏன் அவை இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை விஜித்த ஹேரத் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
இதன் போது நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ பதிலளிக்கையில்,
வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது விசேட துணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த அறிக்கையை நாம் பார்த்தோம். அதில் உருப்படியான எதுவும் இல்லை. அந்த அறிக்கையில் நியாய தன்மையும் இல்லை. அத்துடன் அறிக்கையில் உள்ளவற்றை வெளியிட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். அதனாலேயே அறிக்கையில் பகிரங்கப்படுத்தவில்லை.
அத்துடன் இது தொடர்பில் நீதியான அறிக்கையை சமர்ப்பிக்க தற்போது மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை பகிரங்கப்படுத்தலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM