கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, நீதி, சட்டம், ஒழுங்கு அமைச்சுக்களின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.
அவர் உரையாற்றுகையில்,
எதிர்கட்சித் தலைவருக்கு இதுவரையில் உத்தியோக பூர்வவாசஸ்தலம் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் அந்த வாசஸ்தலம் வழங்குவதற்கு தாமதிக்காது உடன் வழங்கப்பட வேண்டும் என இந்த சபையில் கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டில் தற்போதைய நிலைமையில் கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அண்மையில் கூட இருவர் மீது காரில் வந்து பகிரங்கமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவருக்குரிய உத்தியோக பூர்வமான வரப்பிரசாதங்களை வழங்க வேண்டும் என்றார்.
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM