(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு 27 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை அக்குழுவுக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.
தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ள நிலையில், தலைமைத்துவ பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க முடியாது என ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.
பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு தெரிவு குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு திங்கட்கிழமை (03) கூடிய போது கோபா குழுவின் உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் வருமாறு அறிவித்தார்.
மொஹான் பிரியதர்ஷன த சில்வா, லசந்த அழகியவன்ன, கே. காதர் மஸ்தான், சுரேன் ராகவன், டயனா கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹசீம், சரத் வீரசேகர, விமலவீர திஸாநாயக்க, நிரோஷன் பெரேரா, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,ஜே.சி.அலவத்துவல, அசோக அபேசிங்க மற்றும், புத்திக பத்திரன, ஜயந்த சமரவீர,ஹெக்டர் அப்புஹாமி, ஹெஷா விதானகே, மேஜர் பிரதீப் உந்துகொட, இசுறு தொடங்கொட, வசந்த யாப்பா பண்டார, சாணக்கியன் இராசமாணிக்கம், டீ.சஹன் பிரதீப் விதான, டீ.வீரசிங்க, வீரசுமன வீரசிங்க, சரித ஹேரத் ஹரினி அமரசேகர ஆகியோர் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022ஆகஸ்ட் 10ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM