நீதிக்கான குரல் - கெளரி சங்கரி தவராசா ஒரு தேசிய கதாநாயகி ; உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துறைராஜா

Published By: Digital Desk 3

03 Oct, 2022 | 11:10 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கெளரி சங்கரி தவராசா,  இனம பேதங்களைக் கடந்து,  சிவில் உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடிய ஒரு தேசிய கதாநாயகி என உயர் நீதிமன்ற  நீதியரசர் எஸ். துறை ராஜா தெரிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின்  முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன் தினம் (1) வெள்ளவத்தை - குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் நடந்தது.   இதன்போது கெளரி சங்கரி தவராசாவின்  கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய ' கெளரி - நீதிக்கன குரல் ' எனும் புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நீதியரசர்  எஸ். துறை ராஜா இதனை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில்  உடரியாற்றிய  நீதியர்சர் எஸ். துறைராஜா தெரிவித்ததாவது,

'  நான் கெளரி அக்கா என்றே அவரை அழைப்பேன். சட்டக்கல்லூரி நாட்களில் இருந்து எனக்கு அவரை தெரியும். அமரர் கெளரி சங்கரி தவராசாவினால் இன்று நாம் உயிர் வாழ்கின்றோம் என கூறும் பலர் உலகெங்கும் வாழ்கின்றனர்.

உள்நாட்டு யுத்த கால கட்டத்தின் போது கது செய்யப்பட்ட பலரை, குற்றமற்ற அப்பாவிகள் என நிரூபித்து மறுவாழ்வு அளித்தவர் கெளரி தவராசா.  குரலற்றவர்களின் குரலாக இருந்த அவர், தேவை உள்ள மக்களின்  தேவையை அறிந்து உதவும் மனப்பாங்கினை கொண்டிருந்தார்.

 தனக்கு தீங்கு செய்வோரைக் கூட ஒரு புன்னையால் கடந்து செல்லும் மனப்பாங்கு கொண்ட அவர்,பலரின் வாழ்வைப் பாதுகாத்தவர்.' என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40