( எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும், கொழும்பு 7 ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வீட்டை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை ஒன்று முன் வைக்கப்ப்ட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகம் ஊடாக இந்த கடிதம் அனுப்பட்டுள்ளதாக கூறபப்டுகின்றது.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் 50 நாட்களை கழித்த பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி நள்ளிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்தலோக்க மாவத்தைக்கு முன்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்துக்கு வருகை தந்து அங்கு தங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே கோட்டாபய சார்பில், மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசிக்கும் வீட்டை தனக்கு பெற்றுத்தருமாரு கோரப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லம், புதுப்பிக்கப்ப்ட்டு வரும் நிலையில், ஹெக்டர் கொப்பேகடுவ இல்லத்தில் அவர் தங்கியுள்ளார்.
இந் நிலையில், மிக விரைவில் மஹிந்த ராஜபக்ஷ மீள விஜேராம இல்லத்துக்கு திரும்பவுள்ளார். அவ்வாறு அவர் திரும்பியதும், ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை வீட்டை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு கோரப்ப்ட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM