(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசிலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாேசனைக்குழு எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கூடுகின்றது
அரசிலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை எதிர்வரும் 6மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் அரசிலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாேசனைக்குழு எதிர்வரும் 4ஆம் திகதி 2மணிக்கு கூடுவதற்கு தீர்மானித்திருக்கின்றது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வின் தலைமையில் கூட இருக்கும் இந்த ஆலாேசனைக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த சட்டமூலம் தொடர்பான தங்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இதேவேளை, மின்சக்தி மற்றும் வலுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாேசனைக்குழு கூட்டம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் அன்றைய தினம் காலை 11மணிக்கு கூட இருக்கின்றது. அத்துடன் அரச நிதி தொடர்பான குழு எதிவரும் 3ஆம் திகதி பிற்பகல் 1மணிக்கும் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 3மணிக்கும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 29ஆம் திகதி முதல் தடவையாக கூடிய தேசிய சபையின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி 3மணிக்கு இடம்பெற இருப்பதாக பாராளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM