இலங்கையின் கடன்விவகாரத்தில் சீனாவும் இந்தியாவும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் கடன்விவகாரம் தொடர்பில் ஜப்பான் தனது கடமையை நிறைவேற்ற தயாராகவுள்ளது,ஆனால் இதற்கு தீர்வை காணும் விடயத்தில் இந்தியாவும் சீனாவும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசிக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இலங்கை தேவையான அவசியமான தகவல்களை வழங்கவேண்டும் என தான் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ள ஜப்பானின் நிதியமைச்சர் சீனா இந்தியா உட்பட கடன்வழங்கிய ஏனைய நாடுகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கையும் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிப்படை தன்மையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறான முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜப்பான் கடமையை செய்யும் எனசுனிச்சி சுசுக்கி குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM