நானுஓயா நகர் குப்பை மேட்டிற்கு என்னவாகப்போகிறது ?

Published By: Digital Desk 3

30 Sep, 2022 | 10:53 AM
image

செ.திவாகரன்

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ள நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் நானுஓயா பிரதான நகரில் மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்தின்  அருகில்  கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்  பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை செய்து குப்பை கொட்டுவதனை நிறுத்தினர். 

முற்றிலும் அகற்றப்பட்ட குப்பைகளை மீண்டும் அவ்விடத்தில் கொட்டுவதால் நானுஓயா பிரதான நகரம்  அசுத்தப்படுவதாகவும் , சுகாதார சீர்கேடான நிலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வீதியில் பயணிக்கும் பொது மக்களும் , மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் வெளிநாட்டு,உள்நாட்டு  சுற்றுலா பிரயாணிகளினால் அதிகமாக விரும்பப்படும் நகரமாகும்.

நுவரெலியா பகுதிக்கான ரயில் சேவையின் மத்திய நிலையமாகவும் காணப்படுகின்றன. 

நானுஓயா நகரம் வரலாற்று ரீதியாகவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயா பிரதான நகரில் வர்த்தக நிலையங்களில், வீடுகளில் சேகரிக்கப்படும் அழுகிய உணவு பொருட்கள் , மாமிச கழிவுகள், எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்கள் இவ்விடத்தில் நுவரெலியா பிரதேச சபையின் மூலம்  குப்பைகளைச் சேகரித்து வாகனத்தின் மூலம்  கொட்டப்படுகின்றது.

இதனால் குப்பைகளுடன் மழை நீர் சேரும் போது சாக்கடைகள் நிறைந்த குப்பை நீராக மாறுகின்றன, மொத்தத்தில் மண், நீர் என்று மொத்த சுற்று சூழலுமே நச்சாக மாறுகின்றன .

இந்நிலையில் அழகான இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக இப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு வீசும் துர்நாற்றங்களினால் மனம் நொந்து வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்களும் , மாணவர்ககளும் கோரிக்கை விடுக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02