கம்பஹா – நெதகமுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில், பெண்ணொருவரின் கைப்பையை பறிக்க முயன்றதுடன், ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரொருவரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
35 வயதான மேற்படி நபர் சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா அக்கரவிட்ட பகுதியில் ஒரு பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றார்.
அப்பெண்ணின் கூக்குரல் கேட்டு உதவிக்கு இருவர் வந்தபோது, அவர்களில் ஒருவர் மேற்படி நபரின் கத்திக் குத்தில் பலியானார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெதகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த குறித்த சந்தேகநபரை பொலிஸார் இன்று (30) அதிகாலை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் கத்தியால் தாக்க முயன்றதாகவும், அப்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தநிலையில், மேற்படி நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM