கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி !

30 Sep, 2022 | 10:26 AM
image

கம்பஹா – நெதகமுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில், பெண்ணொருவரின் கைப்பையை பறிக்க முயன்றதுடன், ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரொருவரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

35 வயதான மேற்படி நபர் சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா அக்கரவிட்ட பகுதியில் ஒரு பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றார். 

அப்பெண்ணின் கூக்குரல் கேட்டு உதவிக்கு இருவர் வந்தபோது, அவர்களில் ஒருவர் மேற்படி நபரின் கத்திக் குத்தில் பலியானார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெதகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த குறித்த சந்தேகநபரை பொலிஸார் இன்று (30) அதிகாலை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் கத்தியால் தாக்க முயன்றதாகவும், அப்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தநிலையில், மேற்படி நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08