அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த வர்த்தமானியானது பொது மக்களின் அடிப்படை உரிமை மீறல் - தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டினார்

Published By: Vishnu

29 Sep, 2022 | 11:56 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த வர்த்தமானியானது பொது மக்களின் அடிப்படை உரிமை மீறல் ஆகும்.  இந்த சட்டத்தை   இல்லாமல் செய்வதாயின், பாராளுமன்றில் கொண்டு வந்து இல்லாமலாக்க முடியாது.  

உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுதான் தீர்க்க முடியும். மேலும், ராஜபக்சாக்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்தற்காகவே இவ்வாறான  நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டினார்.  

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகயைில்,

"அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த வர்த்தமானியானது பொது மக்களின் அடிப்படை உரிமை மீறல் ஆகும்.  அரசியலமைப்பின்படி கட்டங்கள், விமானம், கப்பல் ஆகியவற்றுக்காவே இந்த பாதுகாப்பு வலயம் உள்ளடங்குவதாக அரசியல‍மைப்பின் 1955  ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்கத்தின் அரச இரகசியங்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பாராளுமன்ற வளாகம்,  உச்ச நீதிமன்ற வளாகம், உயர் நீதிமன்ற வளாகம், கொழும்பு கோட்டை நீதிமன்றம், சட்ட மா அதிபர்  திணைக்களம், ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, விமான நிலைய தலைமையகம், அலரி மாளிகை, பிரதமரின் செயலாளர் காரியாலயம், பாதுகாப்பு செயலார் மற்றும் முப்படை தளபதி ஆகியோரின் உத்தியோகப்பூர்வ இல்லம் ஆகியன அதிஉயர் பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவை கடுமையான செயற்பாடாகும். இந்த சட்டத்தை   இல்லாமல் செய்வதாயின், பாராளுமன்றில் கொண்டு வந்து இல்லாமலாக்க முடியாது.  உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுதான் தீர்க்க முடியும் " என்றார்.

அரச ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை  வெளியிடுவதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும். உண்மையான தரவுகளையும் தகவல்களையும் வெளியிடுவதற்கு  அரச ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதாகவும்  ஸ்ரீ லங்கா கட்சியின்‍ பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01