காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல் : அமைச்சர் பிரசன்னவின் மகன் உள்ளிட்ட 5 பேர் கைது

Published By: Vishnu

28 Sep, 2022 | 10:59 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் 20 வயதான மகன் உள்ளிட்ட 5 பேர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள்  இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகனின், நண்பனின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவருக்கு வாழ்த்து அட்டை பெற்றுக்கொடுத்தமையை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காதல் விவகாரத்தை மையப்படுத்திய தாக்குதலே அது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கிரிபத்கொட – மாகொல வீதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த  தாக்குதல்  நடாத்தப்பட்டுள்ளது.

 தாக்குதலை முன்னெடுப்பதற்காக சந்தேக நபர்கள்,  தொழில் மற்றும் வாணிப அமைச்சின்  செயலரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள  டொயாடோ ரக  வாகனத்திலேயே வருகை தந்துள்ளதாக  பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளைப் பெர்றுக்கொண்ட பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51