(எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் ஷெஹான் மாலக கமகேவுக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உளவுத் துறையின் பங்களிப்பு இருப்பதாக ஷெஹான் மாலக பொது வெளியில் கருத்து வெளியிட்ட நிலையில், அதனை மையப்படுத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அது அவருக்கு கையளிக்கப்பட்டது.
பின்னர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல ஷெஹான் மாலகவை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அனுமதித்தார்.
மருதானை சி.எஸ். ஆர். மத்திய நிலையத்திலிருந்தவாறு கடந்த 2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஷெஹான் மாலகவால் பொது வெளியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடப்பட்டிருந்தது. அந்த கருத்தால் பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023 ஜனவரி 13 வரை நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM