ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம் கையளிப்பு ; பிணையில் விடுவிப்பு

Published By: Digital Desk 3

28 Sep, 2022 | 04:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் ஷெஹான் மாலக கமகேவுக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உளவுத் துறையின் பங்களிப்பு இருப்பதாக ஷெஹான் மாலக பொது வெளியில் கருத்து வெளியிட்ட நிலையில், அதனை மையப்படுத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அது அவருக்கு கையளிக்கப்பட்டது.

பின்னர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும்  5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு  சரீரப் பிணைகளிலும் செல்ல ஷெஹான் மாலகவை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அனுமதித்தார்.

மருதானை சி.எஸ். ஆர். மத்திய நிலையத்திலிருந்தவாறு  கடந்த 2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஷெஹான் மாலகவால்   பொது வெளியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடப்பட்டிருந்தது.  அந்த கருத்தால் பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023 ஜனவரி 13 வரை நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18