(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த தினங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை வெகுவிரைவில் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும்.
குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாராளுமன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழுவின் முதலாவது கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த தினங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒஃப்த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரால் தயா ரத்நாயக்க (ஓய்வு) ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.
குழுவினர் கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். பாதுகாப்புத் துறையில் ஏதாவது குறைப்பாடுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு நிலை) கமல் குணரத்ன குழு கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும், ஐக்கிய அரவு இராச்சியத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள மீள ஒப்படைத்தல் ஒப்பந்தம் தொடர்பான கட்டளை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்க பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழு அனுமதி வழங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டு இரு நாட்டுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய ஐக்கிய அரபு இராச்சியத்தின் குற்றவாளிகள் உள்ளிட்ட கைது செய்யப்பட வேண்டிய நபர்களை இந்நாட்டுக்குள் கொண்டு வரும்போது ஏற்படுகின்ற சட்ட ரீதியான தடைகளை நீக்குவது இதன் நோக்கமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM