(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பல இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானிக்கு எதிராக வழக்கு தொடுக்க பல தரப்பினரும் தயாராகி வருகின்றனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பலர், உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்க இவ்வாறு தயாராகி வருகின்றனர்.
பெரும்பாலான இடங்களை அதி உயர் பாதுாப்பு வலயங்களாக அறிவிப்பதற்கு அரச இரகசியங்கள் சட்டத்தில் அமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பின் பல பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமன்திரனும் உடர் நீதிமன்றை நாடப் போவதாக எச்சரித்துள்ளார். ஜனாதிபதியின் வர்த்தமானி சட்டத்துக்கு முரண் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைவிட, பல சமூகப்செயற்பாட்டாளர்களும் வழக்கு தொடுக்க தயாராகி வருகின்றனர்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவின் மூலம் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபரின் அனுமதியின்றி அவ்வாறான இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு மற்றும் பேரணிகளை முன்னெடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அரச இரகசியங்கள் சட்டத்தின் இரண்டாம் சரத்தின் பிரகாரம், ஏதேனும் ஒரு இடத்தை, கட்டடத்தை, கப்பலை அல்லது விமானத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது எனக் கூறும் சட்டத்தரணிகள் சங்கம் விசாலமான ஒரு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது. வேறு நோக்கங்களுக்காக இரண்டாம் சரத்தின் கீழ் உத்தரவிட முடியாது எனவும் சங்கம் கூறுகின்றது.
அந்த உத்தரவை மீறும் நபர்களை தடுத்து வைக்க முடியும் என்பதனால், மக்களின் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடல் என்பவற்றை மீறும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இது குறித்து இலங்கை மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குள்ள உரிமை முக்கியமானது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் ஒழுங்குமுறை தொடர்பில் உன்னிப்பாக சிந்தித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM