(எம்.மனோசித்ரா)
பெரும்போக அறுவடையின் பின்னர் நாட்டுக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. இவ்வாரத்திலிருந்து சகல பகுதிகளுக்கும் உரத்தை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
இதன் போது இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலவசமாக யூரியா உரம் வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (25) மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உணவை உண்பதை விட , உள்நாட்டு விவசாயிகள் மீது நம்பிக்கை கொண்டு விவசாயத்தை மேம்படுத்துவதே சிறந்த திட்டமாகும்.
வரவுள்ள பெரும்போகத்தில் வெற்றிகரமாக விளைச்சலைப் பெற்றுக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.
இந்த பெரும்போக அறுவடையின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் கிடையாது.
இவ்வாரத்திலிருந்து சகல பகுதிகளுக்கும் உரத்தை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
2 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு யூரியா உரத்தினை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனையோருக்கும் முன்னரைப் போன்று நிவாரண விலையில் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உர மூடையொன்றை 10 000 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM