(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் வகித்த சகல பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவர்களை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் மத்திய குழு தீர்மானிக்கும் என்று பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
அதற்கமைய நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அவர்கள் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இவர்கள் கட்சியின் மத்திய குழு அங்கத்துவத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள குறித்த உறுப்பினர்கள் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார்களா என்று வினவியதற்கு பதிலளித்த பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ,
மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்பட்டமைக்காக ஒழுக்காற்று குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அவர்கள் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகி உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
இவர்களால் தெரிவிக்கப்படும் காரணிகள் மத்திய குழுவில் மீளாய்வு செய்யப்படும். அதன் பின்னரே இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.
விரைவில் சகல தொகுதி அமைப்பாளர்களையும் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். வெற்றிடம் ஏற்பட்டுள்ள தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
உள்ளுராட்சி தேர்தலுக்காக இவர்களை தயார்படுத்துவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொள்வதே சுதந்திர கட்சியின் இலக்காகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM