இலங்கை - இந்திய இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்த கூட்டு வேலைத்திட்டம்

Published By: Digital Desk 4

23 Sep, 2022 | 08:52 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்தி இந்தியா வழங்கியுள்ள ஒத்துழைப்பிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது நன்றி தெரிவித்தார்.

அத்தோடு உணவு மற்றும் மருந்து என்பவற்றை வழங்கியமைக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

சூரிய மற்றும் காற்று மின் உற்பத்தி திட்டங்களில் இந்தியாவின் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் , துறைமுகம், புகையிரத பாதை, விவசாயம் மற்றும் மீன் பிடி அபிவிருத்திகள் உள்ளிட்ட கூட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் இதன் போது கருத்துக்களை முன்வைத்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டத்தில் இந்தியா காண்பிக்கும் ஒத்துழைப்பிற்கும் பிரதமர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

அனைத்து அபிவிருத்தி துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27