விஜய்யும், அட்லியும் மீண்டும் இணையப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யும் அட்லியும் மீண்டும் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை தயாரிப்பாளர் தரப்பிலோ, இயக்குனர் தரப்பிலோ இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் ‘பைரவா’ படத்தை தொடர்ந்த அட்லி இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் படம் குறித்த வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இப்படத்திற்கு ‘பாகுபலி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு கதை ஆசிரியராக பணியாற்றிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதையாசிரியராக பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என தெரிகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதனையடுத்து, இப்படத்தின் பணிகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM