தினேஸ் பிரதமராக உள்ளபோது தமக்கு ஏற்பட்டுள்ளது நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ஆதங்கம்

Published By: Vishnu

22 Sep, 2022 | 08:49 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

நல்லாட்சி அரசாங்கத்தின்  காலத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக செயற்பட்ட போது தினேஸ் குணவர்தன தலைமையிலான குழுவினருக்கு ஏற்பட்ட நிலைமையை தற்போது அவர் பிரதமராக பதவி வகிக்கும் போது எங்களுக்கு ஏற்பட்டுள்ளமை எந்தளவு அநீதியானது என அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீனமாக செயற்படும் டலஸ் அணியின் 13 உறுப்பினர்களுக்கு  சபையில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக சபையில் இன்று (22) வியாழக்கிழமை எழுந்த சர்ச்சையை தொடர்ந்து

 உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில் 

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 13 உறுப்பினர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மிறப்படுகிறது.

இதேபோன்ற நிலைமை 2015 நல்லாட்சி காலத்தில் ஏற்பட்டது. அப்போது நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் போட்டியிட்டோம்.

இந்நிலையில் கூட்டணியில் குழுவொன்று கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டது. அப்போது தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட 55 பேர் கொண்ட குழு அரசாங்கத்தில் இணையாது எதிர்க்கட்சியில் அமர்ந்தது. அப்போது நான் ஆளும் கட்சியில் இருந்தேன். அன்று  அந்த 55 பேருக்கும் பேசுவதற்கு உரிமை மறுக்கப்பட்டது.

இவ்வேளையில் சபாநாயகர் தீர்மானமொன்றை எடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு கிடைக்கும் நேரத்தில் எதிர்க்கட்சியில் உள்ள 55 பேருக்கும் ஒதுக்குமாறு குறிப்பிட்டார்.

அன்று 55 பேர் கொண்ட பாராளுமன்ற குழுவின் தலைவராக தற்போதைய பிரதமரே இருந்தார். பேச்சு சுதந்திரம் கேட்டு இங்கு அமர்ந்திருந்தனர். அன்று உங்களுக்கு நடந்தது இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அன்று தினேஸ் குணவர்தனவுக்கு நடந்தவற்றை அவர் பிரதமராக இருந்துகொண்டு எங்களுக்கு செய்கின்றார். இது எந்தளவு அநீதியானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04