(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு- வாழைத்தோட்டம் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் சந்தேகநபர்களின் ஒருவர் கொலன்னாவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கிச்சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் 7 கிராம் 945 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் குணசிங்கபுர பிரதேசத்தில் வைத்து குற்றத்திற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபர் கைவசமிருந்த 6 கிராம் 720 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் இருவரும் வாழைத்தோட்டம் மற்றும் குணசிங்கபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM