ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்துவிட்டாலே, ஆளாளுக்கு அறிவுரை சொல்ல, தங்கள் அனுபவங்களை கூற பலர் கிளம்பிவிடுவர். கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்ணுவது, உறங்குவது, உடல் ரீதியாக உறவுகொள்வது வரை அறிவுரை கொடுக்கப்பட்டாலும், உட்காருவது குறித்து யாரும் ஏதும் சொல்வதில்லை. இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரும்போது கால்களை மடக்கி உட்காருவது, வயிற்றில் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும். அதை சாதாரண நிலையில் உணர்வது கடினம். கர்ப்பமாக இருக்கும்போது ஏற்படும் பல உணர்வுகளில், இந்த உணர்வை அடையாளம் காணுவதும் கடினம். கர்ப்பிணிப் பெண்கள் இந்த மாதிரியான சம்மணங்கால் முறையில் உட்காரக்கூடாது. அது நல்லதல்ல.
சம்மணங்கால் போடும்போது, கால்களை குறுக்குவதால் வயிற்றில் உண்டாகும் அழுத்தம், கருவறையில் உண்டாகும் அழுத்தம், பெண்களின் வயிற்றில் உருவாகி வந்துகொண்டிருக்கும் குழந்தையின் மீது பட்டு, ஒன்றில் குழந்தையை கலைந்து போகச் செய்யும். அல்லது குழந்தை முழுமையான வளர்ச்சியை பெற்றுவிட்டால், குழந்தையை வெளிக்கொண்டுவரச் செய்யும்.
கர்ப்பத்தின் முதன்மை காலங்களில் சம்மணங்கால் போட்டு உட்காருவது கருவை கலையச் செய்யலாம். ஆனால், கர்ப்பத்தின் இறுதி காலங்களில் சம்மணங்கால் போட்டு உட்காருவது, கருவை வெளியுலகுக்கு கொண்டு வர செய்யலாம்.
எனவே, சம்மணங்கால் போட்டு உட்காருவதை தவிர்க்க வேண்டும். குழந்தையை வெளியேற்ற இம்முறையை செய்வதாய் இருந்தால், உரிய மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது!
மேலும், கர்ப்பிணிகள் கால்களை நீட்டி உட்காருவதே சிறந்தது. கதிரையில் கால்களை தொங்க போட்டும் உட்காரலாம். அதிக நேரம் காலை தொங்கப் போட்டு உட்கார்ந்தால், பாதங்கள் வீங்க ஆரம்பிக்கும். எனவே, அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதை தவிர்ப்பது நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM