பொதுக் கழிவறை ஒன்றில் பெண்ணொருவரை ரகசியமாக படம்பிடித்த நபரை அப்பெண் கடுமையாக தாக்கி பாடம் கற்பித்த சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டம் பெற்றவர் என்பதை அந்நபர் அறிந்திருக்கவில்லை.
28 வயதான யுவதி ஒருவர், பொதுக்கழிவறைக்குள் இருந்தபோது கழிவறையின் சுவருக்கு மேலாக தொலைபேசி கெமராவை வைத்து அந்த யுவதியை படம்பிடித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதை அந்த யுவதி உணர்ந்துகொண்டவுடன் அந்நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால், குறித்த நபரின் பாதணி மூலம் அந்நபரை அடையாளம் கண்ட அப்பெண், அவரை துரத்திச் சென்றார்.
படம்பிடித்த நபர் மோட்டார் சைக்கிளொன்றில் ஏறி தப்பியோட முற்பட்டபோது. பாதிக்கப்பட்ட யுவதி அந்நபரின் மீது தாக்குதல் நடத்தினார். யுவதியை இளைஞன் தள்ளிவிட்டபோதிலும், அந்த யுவதி கரணம் அடித்து எழுந்து வந்தார். பின்னர், தான் பணியாற்றியஉணவு விடுதியின் ஊழியர்களின் உதவியையும் அந்த யுவதி நாடினார்.
இரகசியமாக படம் பிடித்த நபர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், தனது நடவடிக்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM