கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேர அட்டவணையில் மாற்றம்

Published By: Digital Desk 4

19 Sep, 2022 | 05:22 PM
image

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நாளை (20) முதல் பொதுமக்களுக்காக திருத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி தாமரை கோபுரம் நாளை முதல் வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என குறித்த நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அத்தோடு வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தாமரை கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் நெலும் குளுன என அழைக்கப்படும் பகுதிகள் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பில் தாமரை கோபுரம் திறக்கப்பட்ட முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14