(இராஜதுரை ஹஷான்)
மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நட்டமடையும் அரச நிறுவனங்களின் சொத்து மதிப்பை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு ஆவணங்களுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர வேறெந்த திட்டங்களும் ஜனாதிபதியிடம் கிடையாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்குலகத்தவரின் கொள்கைக்கமையவே செயற்படுகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடுமையானது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.குறித்த நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மேலும் பாதிக்க கூடும்,நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்ட ஒப்பந்த அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
நட்டமடையும் அரச நிறுவங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிடப்படுகிறது.நட்டமடைவதாக குறிப்பிடப்படும் அரச நிறுவனங்களின் உண்மை சொத்து மதிப்பை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறையை தனது அரசியல் கொள்கையாக கொண்டுள்ளார்.
சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய சபை என்ற பாராளுமன்ற குழுவை ஸ்தாபிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு,நிறைவேற்றப்படவுள்ளது.
தேசிய சபையின் கட்டமைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் எதனையும் குறிப்பிடவில்லை.சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம் என்பதற்காகவே தேசிய சபை அமைக்கப்படவுள்ளது.தேசிய சபையின் ஊடக அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM