காலி-கடுகொட பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதுடைய சிறுமியான தமது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் காலி துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது, பாடசாலையின் இரண்டு ஆசிரியைகளுடன் பொலிஸ் துறையில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயங்கொட பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர், ஆன்மீகத்தினால் நோயை குணப்படுத்துவதாக கூறி, கைத்தடியினால் தாக்கப்பட்டு உயிரிழந்த 9 வயதுடைய சிறுமி, இந்த 16 வயதுடைய சிறுமியின் சகோதரி என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு உதவி வழங்கியதாக கூறி, சிறுமியின் தாயார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் குறித்த சிறுமி, தந்தை மற்றும் அவரது பாட்டியுடன் வசித்து வந்துள்ள நிலையில், அந்த சிறுமி நீண்ட காலமாக தந்தையினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமி நீதிமன்ற உத்தரவின் படி, காலி – கித்துல்பிட்டி சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்,சந்தேகநபரான தந்தை, காலி நீதிவான் நீதிமன்றில் நாளை முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM