புற்றுநோய் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களையும் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தலா 20 இலட்சம் ரூபா வீதமும் இலங்கை கிரிக்கெட் சபை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டத்தில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் வலைப்பந்தாட்ட மகளிர் அணியினருக்கும் மற்றும் கொமன் வெல்த் போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் பாராட்டு நிகழ்வு நேற்று 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ஜனாதிபதியிடம் கையளித்தது.
அத்துடன் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய மகளிர் வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா 20 இலட்சம் ரூபாவையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கையளித்தது.
இதேவேளை, கொமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு 10 மில்லியன் ரூபாவையும், வெண்கலப் பதக்கம் வென்றவர் 5 மில்லியன் ரூபாவையும் மற்றும் பயிற்சியாளர்கள் 25 சதவீதமும் விளையாட்டு நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM