(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றை ஒழிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தினை எதிர்வரும் வாரங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய நாளைமறுதினம் சனிக்கிழமை, எதிர்வரும் 24 ஆம் திகதி , ஒக்டோபர் முதலாம் திகதி , 8 ஆம் திகதி ஆகிய வார இறுதிநாட்களில் இந்த வேலைத்திட்டத்தினை பிரதேச சுகாதார பிரிவு மற்றும் வைத்தியசாலைகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் 20 வயது மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக முதலாம், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமையை, 12 - 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திய பின்னர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் 3 இடங்களில் இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். ஏனைய கிளினிக்குகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசியை வழங்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM