மட்டக்களப்பில் நீர் ஓடையில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

15 Sep, 2022 | 04:35 PM
image

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளக் கல்லு மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குசலானமலை பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சித்திரவேல் சிறிகந்தராஜா வயது (58)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மனைவி மற்றும் மகனின் குடும்பத்துடன்  குறித்த வெள்ளக்கல்லு மலைப்பகுதிக்கு மீன் பிடிப்பதற்கும் காட்டில் தேன் எடுப்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்னர் சென்று இருந்த நிலையில், உயிரிழந்தவர் தனது மனைவியிடம் 2,000 ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு பிலிப்பியர் சேனை பகுதிக்கு சென்று வருவதாக கூறி நேற்று காலை சென்று இருக்கின்றார்.

ஊருக்கு சென்றவர் திரும்பவில்லை என மலையில் எதிர்பார்த்திருந்த குடும்பம் இன்று காலை குறித்த வெள்ளகல்லு மலைப்பகுதிகளில் உள்ள நீரோடையில் குறித்த நபர்  சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்திருந்தனர்.

சிரமத்தின் மத்தியில் பொலிஸார் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவை குறித்த இடத்துக்குச் சென்று மரண பரிசோதனை மேற்கொண்டனர்.

பின்னர் சட்ட பரிசோதனைக்காக சடலம் செங்கலடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினருடன் கையளிப்பதற்கான அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09