மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளக் கல்லு மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குசலானமலை பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சித்திரவேல் சிறிகந்தராஜா வயது (58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மனைவி மற்றும் மகனின் குடும்பத்துடன் குறித்த வெள்ளக்கல்லு மலைப்பகுதிக்கு மீன் பிடிப்பதற்கும் காட்டில் தேன் எடுப்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்னர் சென்று இருந்த நிலையில், உயிரிழந்தவர் தனது மனைவியிடம் 2,000 ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு பிலிப்பியர் சேனை பகுதிக்கு சென்று வருவதாக கூறி நேற்று காலை சென்று இருக்கின்றார்.
ஊருக்கு சென்றவர் திரும்பவில்லை என மலையில் எதிர்பார்த்திருந்த குடும்பம் இன்று காலை குறித்த வெள்ளகல்லு மலைப்பகுதிகளில் உள்ள நீரோடையில் குறித்த நபர் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்திருந்தனர்.
சிரமத்தின் மத்தியில் பொலிஸார் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவை குறித்த இடத்துக்குச் சென்று மரண பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் சட்ட பரிசோதனைக்காக சடலம் செங்கலடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினருடன் கையளிப்பதற்கான அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM