மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்துவெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி உடல்நல கோளாறுகளால் கடந்த 8 ஆம் திகதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார்.
ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. மகாராணியின் மறைவால் ஒட்டுமொத்த பிரித்தானியாவும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
அவரது இறுதி சடங்கு வருகிற 19 ஆம் திகதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இதனிடையே ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்போராவில் வைக்கப்பட்டிருந்த மகா ராணியின் பூதவுடலுக்கு முதலில் அரச குடும்பத்தினரும், பின்னர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் மகா ராணியின் பூதவுடல் விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ராணியின் பூதவுடலை மன்னர் 3-ம் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். பின்னர் மகா ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் மகாராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.22 மணி அளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து மகா ராணியின் பூதவுடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மகா ராணியின் பூதவுடல் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
ராணியின் சவப்பெட்டியின் மீது அவரது கிரீடம் வைக்கப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் மகா ராணியின் பூதவுடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு பின்னால் மன்னர் 3-ம் சார்லஸ், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி நடந்து சென்றனர். அதேபோல் மன்னர் 3-ம் சார்லசின் உடன்பிறப்புகளான இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோரும் மகா ராணியின் பூதவுடல் பின்னால் நடந்து சென்றனர்.
மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர்கள் எட்வர்ட் மற்றும் வில்லியம் ஆகியோர் இராணுவ உடைகளை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். அதே சமயம் அரச பதவிகளை துறந்த இளவரசர் ஹரியும், பாலியல் புகாரில் சிக்கி அரச பதவிகளை இழந்த இளவரசர் ஆண்ட்ரூவும் சாதாரண உடையில் பங்கேற்றனர்.
அவர்களுடன் பாரம்பரிய உடைகளை அணிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் மகாராணியின் பூதவுடலுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த பிரமாண்டமான ஊர்வலத்தை பார்ப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் வரை வழிநெடுகிலும் நூற்றுக்கணகக்கான மக்கள் திரண்டிருந்தனர். மதியம் 3 மணி அளவில் ஊர்வலம் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தை அடைந்தது.
பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மகா ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் திறக்கப்பட்டது. ஆனால் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்தே பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
மகா ராணியின் இறுதி சடங்கு நடைபெறுகிற வருகிற 19 ஆம் திகதி காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM