( எம்.எப்.எம்.பஸீர்)
சீதுவை பகுதியின் விகாரை ஒன்றிலிருந்து, விகாராதிபதி தேரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்தில் கட்டில் ஒன்றின் மேல் முகம், வாய்ப் பகுதி துணியினால் கட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் கூறினர்.
சீதுவை - வேத்தேவ, ரந்தொலுவ ஸ்ரீ நத்தாராம விகாரையின் விகாராதிபதி நெடகமுவே மஹானாம தேரரே ( 55) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தேரர் கழுத்து நெறித்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விகாரையிலிருந்து துர் நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையில், 18 வயதான இளம் பிக்கு ஒருவரும் தங்கியிருந்துள்ளதுடன், தற்போது அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், பொலிஸாரின் கவனம் குறித்த பிக்கு மீது திரும்பியுள்ளதாக பொலிஸார் கூறினர். சீதுவை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM