( எம்.நியூட்டன்)
மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள் என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக முன் போராட்டம்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று (14) புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளி, எமது நிலம் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டதை நீக்கு, வடக்கு கிழக்கில் மனித உரிமை காவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, அரசு மனித உரிமை அனைவருக்கும் சொந்தமானது என்ற பதாகைகளை தாங்கியவாறு அமைதிவழி போராட்டமாக இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துதெரிவித்த மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான டோமினிக் பிறேமானந் தமிழ் மக்கள் தமது நீண்ட கால கோரிக்கையாக உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையும் சிங்கள மயமாக்கலை தடுத்து நிறுத்த கோரியும் இராணுவத்தினரால் கையகப்படுத்த காணிகளை விடுவிக்க கோரியும் இப்போராட்டத்தில் வலியுறுத்தி வருகிறார்கள் ஜெனிவா அமர்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் சர்வதேச சமூகம் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற அடக்கு முறைகள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே பாதிக்கப்பட்ட மக்கள் இப்ப போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM