தேவையான பொருட்கள்
சேமியா - 500 கிராம்
சீனி - 400 கிராம்
தண்ணீர் - 400 மி.லி.
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை
சேமியா, முந்திரிப் பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து வைக்கவும். ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேக விடவும்.
கட்டி விழாமல் இருக்க கை விடாமல் கிளற வேண்டும். சேமியா வெந்ததும் சீனி, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது கடைசியாக முந்திரி பருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும். சுவையான சேமியா கேசரி தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM