(இராஜதுரை ஹஷான்)
அரசியல் பயணத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்று நான் ஆற்றிய சேவைக்கு இணையாக இதுவரை எவரும் சேவையாற்றவில்லை.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்தபடியான சிரேஷ்ட அரசியல்வாதியாக நானும் உள்ளேன்.
அமைச்சு பதவியை கோரவில்லை இருப்பினும் முக்கிய அமைச்சு பதவியை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1994ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை அமைச்சு,இராஜாங்க அமைச்சு உள்ளி;ட்ட அரச உயர் பதவிகளை வகித்துள்ளேன்.
கல்வி,சுகாதாரம்,விவசாயத்துறை,சமுர்த்தி,இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன்.
நான் வகித்த அமைச்சு பதவிகளில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன்.அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் ஊடாக நான் ஆற்றிய சேவையை இதுவரை எவரும் ஆற்றவில்லை என்பதை உறுதியாக குறிப்பிடவில்லை.
விளையாட்டுதுறை அமைச்சராக பதவி வகித்த போது சர்வதேச ரீதியில் பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை கோரவில்லை,இருப்பினும் எதிர்வரும் நாட்களில் ஸ்தாபிக்கப்படவுள்ள நிலையான அமைச்சரவையில் முக்கிய அமைச்சு பதவியை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
பாராளுமன்றில் சிரேஷ்டத்துவம் தொடர்பில் அவதானம் செலுத்தினால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்தப்படியான சிரேஷ்ட உறுப்பினராக நாளும்; உள்ளேன் உள்ளேன் என்பதை வெளிப்படை தன்மையுடன் குறிப்பிட முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM