அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காரு, முதியவர் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் (வயது 77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார்.
அப்போது, பீட்டரின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் படுகாயங்களுடன் கிடந்த அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உடனடியாக பொலிஸார், மருத்துவகுழுவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் மருத்துவக்குழுவினர் பீட்டருக்கு முதலுதவி செய்ய முயற்சித்தனர்.
ஆனால், பீட்டரை தாக்கிய செல்லப்பிராணி கங்காரு அவரது அருகே மருத்துவக்குழு செல்ல விடாமல் தடுத்து தாக்க முயற்சித்தது. இதையடுத்து, அந்த கங்காருவை பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.
பின்னர், பீட்டரை மீட்ட மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால், கங்காரு தாக்குதலில் படுகாயமடைந்த பீட்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 86 ஆண்டுகளில் கங்காரு தாக்கி மனிதர் உயிரிழக்கும் சம்பவம் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 1936 ஆம் ஆண்டு காங்காரு தாக்கி ஒரு நபர் உயிரிழந்தார்.
அதன் பின் மனித உயிரிழப்பு நிகழ்வது இதுவே முதல் முறையாகும். அவுஸ்திரேலியாவில் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டில் 5 கோடிக்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM