பெற்றோரின் கவனத்துக்கு.....

Published By: Devika

13 Sep, 2022 | 12:18 PM
image

ன்றைய பெற்றோர், தங்கள் குழந்தை­களுக்கு ஒன்று அதீத செல்லம் கொடுத்து வளர்க்கி­றார்கள். இல்லையென்றால் கட்டுப்­பாடாக வளர்க்கி­றேன் என்று மிரட்டி வதைக்கிறார்கள்.

அதனால், ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு (Raising a child) என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும். குழந்தை ஏதாவது தவறு செய்தால், உங்கள் குரலை உயர்த்தாமல், அதேசமயம் உறுதி­யுடன் அந்த தவறை குழந்தைக்கு புரியும் விதத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.

இதனால் இன்னொருமுறை அந்தத் தவறை குழந்தை செய்யாமல் கற்றுக்கொள்ளும். குழந்தையை அடிப்ப­தாலோ அல்லது குரலை உயர்த்திக் கத்துவ­தாலோ குழந்தை தன் தவறை புரிந்து கொள்­ளப்­போவதில்லை. இந்த இரண்டுமே குழந்­தையை சரி­யான பாதைக்கு கொண்டு செல்லாது. 

தூக்க­மின்மை அல்லது தூக்­கக் குழப்பம் என்பது வயதான­வர்­களின் பிரச்சினை மட்டுமல்ல, எந்த வயதினரையும் தாக்க­லாம். சில பள்ளிக் குழந்தை­களும் அவ்­வாறு இரவில் தூங்­காமல் பிரச்சினை கொடுப்­ப­துண்டு. 

நிம்­மதியான நல்ல தூக்­கம் குழந்­தையை மட்டுமின்றி உங்­களை­யும் அர­­வணைக்கும். உங்கள் குழந்தை குறுநடை போடுகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறீர்களா? விழுந்துவிடுவானா எதை­யா­வது போட்டு உடைப்பானா எனப் பெற்­றோர்­கள் திகிலில் இருக்கும் காலமும் அது­தான். குறு­நடைபோடும் காலம் என்பது பொதுவாக ஒன்று முதல் மூன்று வயது வரை எனக் குறிப்பிடு­கி­றார்கள்.

இக்காலமானது குழந்தைகளின் உடல் வளர்ச்சியோடு அறிவாற்றல், உணர்ச்சிகளின் வெளிப்­­பாடு, சமூக உறவுகளின் விரிவு ஆகியன வளர்­­வதற்குமான மிகவும் முக்கிய காலப்பகுதியாகும்.

இக்­காலத்தில் வாசிப்பதானது அவர்களது கற்கை ஆற்றலை­யும், அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். இக்காலத்தில் ஏற்படும் வாசிப்பு பழக்கமானது அவர்­களை வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஊக்கு­விப்பதாக அமையும்.

உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தை­களைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறை­யில் நீங்­கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள்.

பெற்றோர்களது உணர்வு­களும் செயற்பாடுகளும் பிள்ளைகளை உள்ளூர நன்கு பாதிக்­­கும் என்பதை எப்போதும் பெற்றோர் கருத்தில் வைத்தி­ருக்க வேண்டும்.

அவை பெற்றோர்களினதாக மட்டும் இருக்க வேண்­டிய­­தில்லை. ஆசிரியர்களின், குடும்பத்தில் உள்ள மூத்த­வர்களது, பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனர் என யாராவது ஒரு சிலரின் செயற்பாடுகள் அவர்களை வெறுப்பூட்டுவதாக அல்லது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்