(நெவில் அன்தனி)
மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதன் மூலம் 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியின் அரை இறுதியில் விளையாட தகதிபெற்ற இலங்கை, இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நேபாளத்தை இன்று திங்கட்கிழமை (12) எதிர்கொள்ளவுள்ளது.
இப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இரவு 8.00 மணிக்கு மின்னொளியில் ஆரம்பமாகவுள்ளது.
9 வருடங்களுக்கு முன்னர் 16 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட இப் போட்டி இந்த வருடத்திலிருந்து 17 வயதுக்குட்பட்ட போட்டியாக நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் சகல போட்டிகளிலும் முதல் சுற்றுடன் வெளியேறிய இலங்கை இந்த வருடம்தான் முதல் தடவையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதுவும் கனிஷ்ட அல்லது சிரேஷ்ட மட்டத்தில் மாலைதீவுகளை 16 வருடங்களின் பின்னர் வெற்றிகொண்டதன் மூலமே அரை இறுதியில் விளையாட இலங்கை தகுதிபெற்றுள்ளது.
இதற்கு முன்னர் 2006இல் நடைபெற்ற தெற்காசிய விளiயாட்டு விழாவில் மாலைதீவுகளை இலங்கை (23 வயதின் கீழ்) வெற்றிகொண்டிருந்தது. எனினும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.
இந்த வருட 17 வயதுக்குட்பட்ட போட்டியில் இலங்கை ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் ஏ குழுவில் 2ஆம் இடத்தைப் பெற்றது. 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலாம் இடத்தைப் பெற்றது.
பங்ளாதேஷிடம் 1 - 5 என படுதோல்வி அடைந்த இலங்கை, மாலைதீவுகளுடனான 2ஆவது போட்டியில் மொஹமத் முபாஸ் போட்ட கோலின்மூலம் வெற்றிபெற்றது.
மறுபுறத்தில் பூட்டான் (2 - 1), இந்தியா (3 - 1) ஆகிய அணிகளை பி குழுவில் வெற்றிகொண்ட நேபாளதை இலங்கை வெற்றிகொள்வது இலகுவான காரியமல்ல. இன்றைய போட்டியில் இன்னும் அதிகமான பிரயாசையுடன் இலங்கை விளையாடுவது அவசியமாகும்.
இது இவ்வாறிருக்க, பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையையும் (5 - 1), மாலைதீவுகளையும் (5 - 0) என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிகொண்ட பங்களாதேஷ் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூட்டானை 3 - 0 என வெற்றகொண்ட இந்தியா, இன்றைய போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தி வெற்றிபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM