69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது - டலஸ்

Published By: Digital Desk 4

11 Sep, 2022 | 08:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற மக்களாணை அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளமை மக்களாணைக்கு முற்றிலும் விரோதமானது என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

கண்டி –கடுகஸ்தொட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் பல்வேறு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் முறைமை மாற்றத்திற்காக 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும்,2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு பல்வேறு காரணிகளினால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசார மேடைகளில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி மோசடியாளராகவும்,நாட்டை காட்டி கொடுப்பவராகவும்,பொருளாதாரத்தை இல்லாதொழித்தவராகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்,ஆனால் தற்போது பொருளாதாரத்தை மேம்படுத்த அவரே இறுதி என குறிப்பிட்டுக்கொண்டு அவருக்கு எதிரான 69 இலட்ச மக்களாணை அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரையான காலத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் இனம்,மதம்,யுத்தம்,யுத்த வெற்றி ஆகியவற்றை தேர்தல் பிரசாரமாக விற்கு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளன.4 குடும்பங்கள் தொடர்ச்சியாக நாட்டை ஆட்சி செய்துள்ளன.குடும்ப ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக திறமையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.

பொதுஜன பெரமுனவின் ஒருசில சுய சிந்தனையற்ற உறுப்பினர்கள் எமது அரசியல் பயணம் பற்றி விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.சிறந்த அரசியல் மாற்றத்திற்காகவே பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08